தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் ரூ.29 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை!

தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்க சுமார் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த பூமிபூஜையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் 2022 மற்றும் 23 நிதியாண்டிற்கான 15வது நிதி குழு மாநிலத்தில் 29 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டது.

அதில் உடுமலை சாலை ஏழாவது வார்டு பகுதியில் குறிஞ்சி நகர் மற்றும் சலவையாளர் காலனிக்கு சிமெண்ட் சாலை அமைக்க பதினைந்து லட்சமும் அலங்கியம் சாலையில் உள்ள மெட்ரோ சிட்டியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, அந்த பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் பைப் லைன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் மெட்ரோ சிட்டி மற்றும் மலையம்மன் நகர் ஆகிய 2 நகர்களுக்கு 14 லட்சம் உள்ளிட்ட மொத்தம் 29 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ரமேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், ஊராட்சி துணை தலைவர் நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர் சரஸ்வதி தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் பெரியசாமி ஏற்பாடு செய்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...