கோவை விமான நிலையத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் மோசடி!

கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் மோசடி செய்த கோவை நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(59). இவருக்கு கோவை நீலிகோனாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் அறிமுகம் ஆனார். ராதாகிருஷ்ணன் கோவை வந்த போது மணிகண்டனை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தனது மகனுக்கு வேலை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட மணிகண்டன் தனக்கு கோவை விமான நிலையத்தில் உயர் அதிகாரியுடன் நெருக்கமான பழக்கம் உள்ளது. சிலருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்து இருக்கிறேன்.

நீங்கள் பணம் கொடுத்தால் நான் கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை ராதாகிருஷ்ணனும் உண்மை என நம்பி, கடந்தாண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.12.50 லட்சத்தை மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட மணிகண்டன் கூறியபடி வேலையை வாங்கி கொடுக்கவில்லை.

இது குறித்து கேட்டால் சரியாக பதில் சொல்லவும் இல்லை. இதனால் ராதாகிருஷ்ணன், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதாகிருஷ்ணன், பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...