கோவை மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருட்டு!

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 20ஆண்டுகளாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமராவை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மதுக்கரை குவாரி ஆபிஸ் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் 20 ஆண்டுகளாக அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று காலையில் வந்து பார்த்த போது, கடையின் முன் பக்க ஷட்டரை கியாஸ் கட்டிங் மூலம் வெட்டி திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமரா திருடப்பட்டதும், உள்ளே மிளகாய் பொடியைத் தூவிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலையில் மர்ம நபர்கள் கியாஸ் கட்டிங் மூலம் ஷட்டரை உடைத்து, உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராவை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் குணசேகரின் கடையின் அருகே உள்ள இளையராஜா என்பவரது, பைனான்ஸ் நிறுவனத்தின் ஷட்டரையும் மர்ம நபர்கள் வெட்ட முயன்றதும், ஆனால் ஷட்டர் கதவு சுவருடன் இணைக்கப்பட்டிருந்ததால், அங்கேயும் மிளகாய் பொடியைத் தூவி விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...