வால்பாறையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவை: வால்பாறையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் படித்த இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.
இதில் 250 பேருக்கு பணி வாய்ப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.