தாராபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா - அழகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பூவோடு எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக் கடனாக, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.



தாராபுரம்: தாராபுரம் மகா மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவில், பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திர தெருவில் உள்ளது பழமை வாய்ந்த மகா மாரியம்மன் திருக்கோவில். இந்தத் திருக்கோவிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கம்பம் எடுத்துவந்து பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.



இந்த நிலையில், தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து தேவேந்திர தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பூவோடு எடுத்தும், பெண்கள் அழகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் பெண்கள் ஆண்கள் என இருவரும் சுமார் 10 அடி நீளம் வேலை அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.



பக்தர்கள் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பூவோடு எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக் கடனாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஒரு தம்பதியினர் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...