கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ பற்றியெரிந்து கொண்டுள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக நீலகிரி மற்றும் சிறுமுகை வனச்சரகத்தில் இருந்து கூடுதல் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
Coimbatore: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து வருகிறது.
சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்துவரும் நிலையில், 40 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மூங்கில் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

தற்போதுவரை, சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்ட நிலையில், சிறுமுகை மற்றும் நீலகிரி வனச்சரகத்தில் இருந்து கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் குழு தீயை அணைக்கும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
காற்றின் திசைக்கு ஏற்ப தீயை அணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்துவரும் நிலையில், 40 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மூங்கில் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
தற்போதுவரை, சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்ட நிலையில், சிறுமுகை மற்றும் நீலகிரி வனச்சரகத்தில் இருந்து கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் குழு தீயை அணைக்கும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
காற்றின் திசைக்கு ஏற்ப தீயை அணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.