கோவையில் குறைதீர் மனுநாள் கூட்டம் - 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு!

கோவை அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மனு நாள் முகாம் நடைபெற்றது. இதில், 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிராந்திபாடி குமார் தலைமையில் குறைதீர் மனு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இதில் அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுக்கு கீழ்ப்பகுதியில் பயனீர் மில் ரோடு முதல் E2 காவல் நிலையம் வரை மழைநீர் வடிகால் பாதை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் தொடர்ந்து மூன்று நான்கு மாதங்களாக அவிநாசி சாலை, பயனீர் மில் சாலை சந்திப்பில் தொடர்ந்து சாக்கடை நீர் வெளியேறி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்யக் கோரியும், அதேபகுதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்க கோரியும் 26ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...