கிணத்துக்கடவு அருகே திமுக ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் - பொதுமக்கள் முற்றுகை!

கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கிணத்துக்கடவில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி கிணத்துக்கடவு காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட நம்பர் 10 முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு அனுமதியின்றி கிராவல் மணல் லாரியில் கொண்டு செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சதீஷ்குமார் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஒரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில், காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி நம்பர் 10 முத்தூர் பகுதி சேர்ந்த கிராம மக்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தை திடீரென முற்றறுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், அங்கிருந்த காவல்துறையினர் முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதி சேர்ந்த காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம், ஈஸ்வரன், சாந்தலிங்கம் ஆகிய ஐந்து பேரும் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஈஸ்வரன், சாந்தலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...