கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவிடம், பொதுமக்கள் 86 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவிடம், பொதுமக்கள் 86 பேர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதாக்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.மோ.ஷாமிளா, க.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் மேயரிடம், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 86 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநா வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்திருந்தனர்.
இவற்றில், கிழக்கு மண்டலத்தில் 19 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 10 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 14 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 13 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 21 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 9 மனுக்களும் எனமொத்தம் 86 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையார்கள் அண்ணாதுரை, எஸ்.கணேஷ்குமார்(பொ), முத்துராமலிங்கம், மோகனசுந்தரி, சேகர், உதவி ஆணையா்(வருவாய்) செந்தில்குமார் இரத்தினம், நகரமைப்பு அலுவலா் கருப்பாத்தாள், உதவி செயற்பொறியாளார்கள், உதவி நகரமைப்பு அலுவலாகள், உதவி பொறியாளார்கள், மாநகராட்சி அனைத்து அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதாக்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.மோ.ஷாமிளா, க.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் மேயரிடம், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 86 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநா வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்திருந்தனர்.
இவற்றில், கிழக்கு மண்டலத்தில் 19 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 10 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 14 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 13 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 21 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 9 மனுக்களும் எனமொத்தம் 86 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையார்கள் அண்ணாதுரை, எஸ்.கணேஷ்குமார்(பொ), முத்துராமலிங்கம், மோகனசுந்தரி, சேகர், உதவி ஆணையா்(வருவாய்) செந்தில்குமார் இரத்தினம், நகரமைப்பு அலுவலா் கருப்பாத்தாள், உதவி செயற்பொறியாளார்கள், உதவி நகரமைப்பு அலுவலாகள், உதவி பொறியாளார்கள், மாநகராட்சி அனைத்து அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.