கோவை ஏர்போர்ட்டில் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் நியமனம் - விமான நிலையம் ஆணையகம் நடவடிக்கை!

கோவை விமான நிலையத்தில் காலியாக இருந்த ஸ்கேனர் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு 4 ஊழியர்களை விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது. அடுத்த மாதம் முதல் உள்நாட்டுப் பிரிவில் 350 டன் சரக்குகள் கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம். உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் சரக்குகள் கையாளப்படுகின்றன.

மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன.

புதிய விதியின்படி ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’பணிக்கு ஊழியர்கள் நியமிக்க காலதாமதம் ஏற்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது நான்கு ஊழியர்களை விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் கோவையிலிருந்து அனுப்புவது மற்றும் கோவைக்கு அனுபப்படுவது என இரண்டும் சேர்த்து 700 டன் சரக்குகள் கையாளப்பட்டு வந்தன. விமான நிறுவனங்களே ஸ்கேனர் ஆபரேட்டர்களை நியமித்து வந்த நிலையில், விமான நிலைய ஆணையகம் புதிய விதியை அமல்படுத்தியது.

அதன்படி விமான நிலைய ஆணையகம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே இப்பணியில் அமர்த்த வேண்டும். கோவையில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாத காரணத்தால், கடந்த 3 மாதங்களாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மாதந்தோறும் கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படும் 350 டன் சரக்குகள் மட்டும் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலைய ஆணையக தலைமையகம் கோவைக்கு 4 ஸ்கேனிங் ஆபரேட்டர்களை நியமித்துள்ளது. அதில், ஒருவர் நேற்று முன்தினம் பணியில் சேர்ந்து விட்டார். மீதமுள்ளவர்கள் சில நாட்களில் பணியில் சேர உள்ளனர். மே மாதம் முதல் நான்கு பேரும் பணியாற்ற தொடங்குவார்கள்.

இதனால், மீண்டும் வழக்கம் போல் சரக்கு போக்குவரத்து கையாளும் அளவு பழைய நிலைக்கு திரும்பும். கோவை விமான நிலையத்துக்கு குறைந்தபட்சம் 10-க்கும் மேற்பட்ட ஸ்கேனிங் ஆப்ரேட்டர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான ஊழியர்கள் நேர்காணல் நடவடிக்கையை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...