திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. அமமுக துணைப்பொதுச்செயலாளர் உடுமலை சண்முகவேலு நீர்மோர்ப்பந்தலை திறந்துவைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை அமமுக துணை பொதுச்செயலாளர் , முன்னாள் அமைச்சருமான உடுமலை சண்முகவேலு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமமுகவின்நகரச் செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் குருவாயூரப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரேம்குமார் ,நகரத் துணைச் செயலாளர் பனியன் துறை, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சிவானந்தம்,
அமமுக நிர்வாகிகள் ராஜ்குமார், ஷாஜகான், யுவராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இந்து ராணி, மகளிர் அணி நகர செயலாளர், புவனேஸ்வரி உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.