தமிழக விவசாயிகளால்தான் திமுக அரசு வீழும்..! - பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் காட்டம்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பிஏபி வாய்க்கால் கரையோரம் உள்ள விவசாயிகளின் ஆழ்துளை கிணறு மற்றும் மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். விவசாயிகளால்தான் திமுக அரசு வீழப்போகிறது என்று பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சியில் நல்லாகவுண்டம் பாளையத்தில் மத்திய அரசின் இல்லம்தோறும் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.



இதில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ் கலந்து கொண்டார்.



இதைத் தொடர்ந்து, பொங்கலூரில் பாஜக விவசாய அணியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இது குறித்துப் ஜி கே நாகராஜ் பேசியதாவது:

பிஏபி வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள விவசாயிகளின் ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் வறட்சியை போக்கும் வகையில் குளம் குட்டைகளில் நீர் செரிவூட்டும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு மாநில அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

வாழை போன்ற பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டை தனிப்பட்ட விவசாயிகளின் இழப்பீட்டை பொருத்து வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கால்நடை தீவனங்களை மானிய விலையில் அரசு கொள்முதல் செய்து தர வேண்டும்,

குறைந்தபட்ச விலையாக மாட்டு பாலுக்கு 50 ரூபாயாகவும், எருமை பாலுக்கு 70 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். அரசு கொள்முதல் செய்யும் கொப்பரை விலையை கிலோ ஒன்றுக்கு 150 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசே தேங்காயை கொள்முதல் செய்து பொது விநியோக திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டப்பட்டு தேங்காய் எண்ணெய்யாக வழங்க வேண்டும்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை சரியாக தமிழக அரசு பராமரிக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களை சரி செய்யாவிட்டால் விரைவில் நெல் மூட்டைகளோடு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துவார்கள். விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த ஒரு திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை. விவசாயிகளால் தான் திமுக அரசு வீழப்போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...