தாராபுரம் அருகே இரவு நேரங்களில் மரங்களை வெட்டிக் கடத்தும் மர்ம கும்பல்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் வளர்க்கப்பட்டு வந்த 7 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்திய கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஓடும் அமராவதி ஆறு, தாராபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு உயிர் நாடியாக இருந்துவருகிறது.

இந்த ஆற்றின் கரையோர பகுதியில் இருபுறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளியமரம், சவுக்கு, தேக்கு மரம் உள்ளிட்ட மரங்களை வனத்துறையினர் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அலங்கியம் கூடுதுறை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.7 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மரங்களை வெட்டி கடத்தி சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...