கோவை அருகே தண்ணீர் தொட்டியில் யானை குட்டி சடலம் மீட்பு

கோடைக் காலம் துவங்கியதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில் கோவை பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்ட கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானை குட்டி இறந்த நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் யானை குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை பகுதியில், அபராஜிதா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.

இதையடுத்து தோட்டத்திலிருந்த பணியாளர்கள் பார்த்த போது, அதில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக வனத்துறை ஊழியர்கள் இறந்த யானை குட்டியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 அடி ஆழம் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானைகள் கூட்டமாக வந்த போது, அதில் சிறிய குட்டி தவறி விழுந்திருக்கலாம் எனவும், குட்டி விழுந்து சுமார் 3 நாட்களாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை குட்டியின் உடலை மீட்டவுடன், நாளை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...