கோவை குறிச்சி அடுத்த வெங்கடாசலபதி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், அபூபக்கர் சித்திக் (29) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் குறிச்சி அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை குறிச்சி வெங்கடாச்சலபதி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போத்தனூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் சென்ற போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அபூபக்கர் சித்திக் (29) என்பவர் போதை மாத்திரைகளுடன் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் இவர் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அபுபக்கர் சித்திக்கை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குறிச்சி வெங்கடாச்சலபதி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போத்தனூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் சென்ற போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அபூபக்கர் சித்திக் (29) என்பவர் போதை மாத்திரைகளுடன் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் இவர் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அபுபக்கர் சித்திக்கை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.