உடுமலை மாரியம்மன் கோவில் நன்கொடை பெறுவதில் முறைகேடு - தூக்கத்தில் நடந்த தவறு என அதிகாரி விளக்கம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இரவு பகலாக ஊழியர்கள் உறக்கமின்றி வேலை செய்ததால் தவறு நிகழ்ந்து விட்டதாக செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை பெறுவதில் நடைபெற்ற தவறு தூக்கத்தில் நிகழ்ந்ததாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்பட்டு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதுதொடர்பாக உடுமலை இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல் தலைமையில் செயல் அலுவலர் சினிவாசனிடம், இதுகுறித்து நேரில் விளக்கம் கேட்கப்பட்டது.

அப்பொழுது பேசிய அவர், இரவு பகலாக ஊழியர்கள் பணியாற்றி வருவதால் தூக்க கலக்கத்தில் சிறு தவறு ஏற்பட்டு விட்டது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இனி பார்த்துக் கொள்ளப்படும் என்று புது விளக்கம் அளித்துள்ளார்.

தூக்கத்தில் இருந்த காரணத்தால் தவறு ஏற்பட்டு விட்டது என செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் ஏற்கக் கூடியது அல்ல. உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...