தமிழகத்தின் புலிகள் காப்பகங்களின் செயல்பாடு - பாராட்டி அங்கீகாரம் அளித்த மத்திய அரசு!

இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது.


புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புலிகள் எண்ணிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்டார்.

அதன்படி, இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டைவிட, தற்போது 6.7% அதிகரித்து இந்தியாவில் 3,167 புலிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 2,967ஆகும்.

1960 ம் ஆண்டு காலக்கட்டங்களில், இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறைந்து வந்ததால், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 1968ம் ஆண்டு புலிகளை வேட்டையாட தடை கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு வன விலங்குகள், காடு, பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'வன உயிர் பாதுகாப்புச் சட்டம்' அமல்படுத்தப்பட்டது.

இதன் நீட்சியாக, குறைந்து வந்த புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு 1973ஆம் ஆண்டு,'புலிகள் பாதுகாப்பு திட்டம்' என்ற திட்டத்தை அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி நடைமுறைப்படுத்தினார். அதையடுத்து, முதற்கட்டமாக இந்தியா முழுவதும் காடுகளில் வாழ்ந்த புலிகளை பாதுகாக்க, 9 புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன.

அந்த வகையில், கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயம், உத்தரகண்டில் கார்பெட் தேசியப் பூங்கா உட்பட மொத்தம் 9 புலிகள் காப்பகங்கள் 18 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன. புலிகள் வாழும் காட்டின் பரப்பளவு 18 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் இருந்து 75,000 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இது மொத்த இந்திய பரப்பளவில் 2.4% ஆகும்.

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை பொறுத்து, காப்புக்காடுகள் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டன. அதன்படி கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியிருந்த தமிழகத்தின் முதுமலை, ஆனைமலை ஆகிய பகுதிகள் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்த ஆண்டுகளிலிலும் புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விவரப்படி, 2006 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அந்த விவரங்கள்:

2006 - 1,411

2010 - 1,706

2014 - 2,226

2018 - 2,967

2022 - 3,167

2022ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை புலிகள் காப்பகங்களின் செயல்பாடு கடந்த ஆண்டை விட சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இந்த மூன்று காப்பகங்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அம்சங்கள் - தமிழ்நாடு புலிகள் காப்பகங்கள் சிறந்தவை. சிறந்த மேலாண்மை நடைமுறைகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தமிழக குழுவுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புலிகள் பாதுகாப்பு திட்டம், 50வது ஆண்டை நிறைவு செய்யும் தருணத்தில், தமிழ்நாட்டின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...