உடுமலையில் பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சி - கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

உடுமலையில் உள்ள ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் சத்ய சாய் சேவா சமிதிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து நடத்திய பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சியில் ஏராளமான மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று சேவை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பெயர்களை பதிவு செய்தனர்.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சியில் கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, சத்ய சாய் சேவா சமிதிகள் மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லுாரி சார்பில் பேரிடர் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சேவா சமிதி மாவட்ட குழு நிர்வாகத்தினர் பேரிடர் வழிகாட்டுதல் குறித்து பேசினர். தொடர்ந்து, பேரிடர் காலத்தின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து, கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்விற்கு கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, தேசிய மாணவர் படை இயக்குனர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் மற்றும் தேசிய மாணவர் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் சேவை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தங்கள் பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...