பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்படும்- பண்டாரு தத்தாத்ரேயா

பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டம் விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அலுவவலர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொண்டு அரசிடம் வைக்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தத்தாத்ரேயா கூறுகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவும், இதற்கான மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

காலத்திற்கு ஒவ்வாத 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைக்கும் சட்ட மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், வரவிருக்கும் கூட்டத்தொடரில் சம்பளம், நிறுவனத்துடன் ஒத்துழைப்பு என இரண்டு மசோதாக்களும் அடுத்த கூட்டத்தொடரில் சமூக பாதுகாப்பு மற்றும் வேலை சூழல், உடல்நலன், பணி பாதுகாப்பு ஆகியவை அடங்கிய இரண்டு சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ரோஸ்கார் யோஜனா திட்டம் மூலம் புதிதாக பணியில் இணையும் ஜவுளித்துறை ஊழியர்களுக்கு 12 சதவிகித பி.எப் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறிய அவர், இது வழக்கமான 8.33 சதவிகிதத்தை விட கூடுதல் என்பதால் ஜவுளித்துறையில் கூடுதல் பணிகள் மற்றும் தொழில்களை உருவாக்க இது உதவும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...