கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் வினோத்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக துடியலூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர்.பார்க் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் வினோத்குமார் என்பதும் அதே பகுதியில் வசித்து வருவதும், இவர் ஆந்திர மாநிலம் குச்சிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை இரயில் மூலம் கடத்தி வந்து கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்ததும்.
இதைத் தொடர்ந்து, வினோத்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். துடியலூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர்.பார்க் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் வினோத்குமார் என்பதும் அதே பகுதியில் வசித்து வருவதும், இவர் ஆந்திர மாநிலம் குச்சிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை இரயில் மூலம் கடத்தி வந்து கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்ததும்.
இதைத் தொடர்ந்து, வினோத்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். துடியலூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.