கோவை துடியலூரில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் வினோத்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக துடியலூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர்.பார்க் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் வினோத்குமார் என்பதும் அதே பகுதியில் வசித்து வருவதும், இவர் ஆந்திர மாநிலம் குச்சிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை இரயில் மூலம் கடத்தி வந்து கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்ததும்.

இதைத் தொடர்ந்து, வினோத்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 65 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். துடியலூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...