அவிநாசி அருகே கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி மற்றும் தேர்திருவிழா நடைபெற்றது. அதிகாலை 4மணி முதல் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருப்பூர்: அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியன்று குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வந்தது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று விடியற்காலையில் 4 மணிக்கு தொடங்கியது.



பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷம் முழங்க' குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இந்த வருட திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாதுஅவிநாசி, கோபி,சத்தியமங்கலம், ஈரோடு, அந்தியூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் வடம் பிடித்து இழக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...