அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி மற்றும் தேர்திருவிழா நடைபெற்றது. அதிகாலை 4மணி முதல் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர்: அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெளர்ணமியை முன்னிட்டு தீமிதி விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியன்று குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று விடியற்காலையில் 4 மணிக்கு தொடங்கியது.

பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷம் முழங்க' குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த வருட திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாதுஅவிநாசி, கோபி,சத்தியமங்கலம், ஈரோடு, அந்தியூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் வடம் பிடித்து இழக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியன்று குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று விடியற்காலையில் 4 மணிக்கு தொடங்கியது.
பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி கோஷம் முழங்க' குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த வருட திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாதுஅவிநாசி, கோபி,சத்தியமங்கலம், ஈரோடு, அந்தியூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் பகுதிகளிலிருந்து சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் வடம் பிடித்து இழக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.