உடுமலையில் ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு!

உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு உடுமலை - தளி சாலையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் அனைவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு உடுமலை - தளி ரோட்டில் உள்ள சன் கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் கலந்து கொண்டு நோன்பின் சிறப்பு சமய நல்லிணக்கம் பேணுதல் குறித்து பேசினார். தொடர்ந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு சமரசம் மாத இதழ் பொறுப்பாசிரியர் முஹம்மது அமீன் புத்தகங்களை பரிசளித்தார்.

சமய நல்லிணக்க நோன்பு சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...