ஈஷாவிற்கு பிரதமர் மோடி வருவதை விமர்சித்து பேசுபவர்கள் ஹிந்து விரோத சக்திகள் என, கோவையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டி


கோவையில் அமைந்துள்ள ஈஷாவிற்கு பிரதமர் மோடி வருவதை விமர்சித்து பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும், மதவாதி காருண்யா மீது கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுப்போம் என கோவையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு மேப்டியளித்த பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை  மாநில அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பணத்திற்காக மகப்பேறு அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தமிழகமும் ஒன்று. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் உதவியுடன் விவசாயிகளின் கவலைகளை நீக்க ஆய்வு செய்து தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதை எதிர்ப்பவர்கள் இந்து விரோத சக்திகள், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மத ரீதியாக பாகுபாடுகள் இல்லை.

காருண்யா பல்கலைக் கழகம் காட்டாறுகளை தடுத்தும், அனுமதியின்றி கட்டிடங்களை கட்டி இருப்பதாலும் மலைவாழ் மக்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக் கழகம் மீது பாஜக சட்டப்படி வழக்கு தொடரும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுயமாக சிந்தித்து தைரியமாக செயல்பட வேண்டும். திமுக, அதிமுக கட்சிகள் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த குடும்ப ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது" என அவர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...