ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டம்.
திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து, தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து முன்னிலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனை காரணம் காட்டி காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என குற்றம் சாட்டப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விசிக, எஸ்டிபிஐ, திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து, தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து முன்னிலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனை காரணம் காட்டி காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என குற்றம் சாட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விசிக, எஸ்டிபிஐ, திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.