ராகுல் காந்தி விவகாரம்: தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து, தாராபுரம் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து முன்னிலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.



இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அநீதியானது என்றும், அதனை காரணம் காட்டி காந்தியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என குற்றம் சாட்டப்பட்டது.



காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விசிக, எஸ்டிபிஐ, திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...