சிபிஎஸ்ஐ ரத்து மற்றும் அகவிலைப்படி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி சிபிஎஸ்ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், முடக்கப்பட்ட ஒப்புடைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.