உடுமலை ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவுறுத்தலின்படி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட போடிபட்டி மற்றும் சின்னவீரன்பட்டி ஊராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவுறுத்தலின்படி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செளதர்ராஜன், சின்ன வீரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஊராட்சிமன்ற சிறப்பு சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பொது சுகாதார பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பணிகள் விபரம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்தும், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு வறுமை குறைப்பு திட்டம் ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் திட்டம் குறித்தும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டம் குறித்தும் குறித்து உட்பட பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சிகள் மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...