உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவுறுத்தலின்படி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட போடிபட்டி மற்றும் சின்னவீரன்பட்டி ஊராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவுறுத்தலின்படி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செளதர்ராஜன், சின்ன வீரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஊராட்சிமன்ற சிறப்பு சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பொது சுகாதார பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பணிகள் விபரம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்தும், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு வறுமை குறைப்பு திட்டம் ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் திட்டம் குறித்தும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டம் குறித்தும் குறித்து உட்பட பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சிகள் மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.