யுகாதி பண்டிகை - திருப்பூர் கோவில்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாலிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சடையப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: யுகாதி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று வழிபாடு செய்தனர்.

யுகாதி என்று அழைக்கப்படும் பண்டிகை தெலுங்கு வருடப்பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தெலுங்கு மொழி பேசும் மக்களால், இந்த பண்டிகை கோலாகலாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது மார்ச் 22ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் துவங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும் என்பதால் ஏராளமானோர் புதிய தொழில்களை இந்த நாளில் துவங்குவது வழக்கம்.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள பழமையான சடையப்பன் கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானமக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இதனிடையே யுகாதி திருவிழாவை முன்னிட்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று வழிபாடு செய்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...