பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்து பொதுமக்கள் மகாலிங்கபுரம் குடிநீர் வடிகால்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் குடிநீரின்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றியிட்டு மனு அளிக்க வந்தனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்தும் குடிநீர் 20 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுவதால் குடிநீர் இன்றி மாக்கினாம்பட்டி ஊராட்சியில் உள்ள வைகை நகர், பாலாஜி நகர், கந்தசாமிபுரம் போன்ற பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், தற்போது அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், சின்னாபாளையம் ஊராட்சியிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...