திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமையவுள்ள, புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2கோடி நிதியுதவி வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என்றார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ரூ.90கோடியில் இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவ கருவிகளுடன் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கும் விழா இன்று பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் ECGC நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்நாதன், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சங்கத் தலைவர் சக்திவேல் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் முருகேசன் வழங்கினர்.



இந்நிகழ்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை விட அதிநவீன கருவிகளுடன் திருப்பூரில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறித்து இப்போது சொன்னால் பட்ஜெட் ரகசியம் வெளியாகிவிடும் எனவே நாளை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...