பல்லடம் இரும்பு உருக்கு ஆலை விவகாரம் - 3வது நாளாக தொடரும் போராட்டம்!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிரான போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், முறையாக சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இந்த ஆலை இயங்கி வருவதாகவும், இந்த ஆலையில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இந்நிலையில் இந்த ஆலைக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உரிமம் வழங்கக் கூடாது என கூறி ஊருக்கு நடுவே பந்தல் அமைத்து ஆலையை மூடக்கோரி மூன்று நாட்களுக்கு அப்பகுதி மக்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

மூன்றாவது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை பாடலாக பாடி ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலைக்கான உரிமத்தை மீண்டும் வழங்கக் கூடாது எனவும், மீறி உரிமம் வழங்கினால் எங்களது போராட்டம் சாகும் வரை தொடரும் எனவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...