கேரளாவுக்கு 2 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - கோவையில் பெண் ஊழியர்கள் உட்பட மூவர் கைது!

கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆட்டோ மூலம் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் துறை போலீசார், அவருக்கு உடந்தையாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விற்பனை செய்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்கள் மீனா மற்றும் லதா ஆட்டோ ஓட்டுனர் அய்யாதுரை ஆகியோரை கைது செய்தனர்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு 2 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நியாய விலை கடை பெண் ஊழியர்கள் இருவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு கூடுதல் இயக்குநர் அருண் உத்தரின் பேரில் தமிழகம் முழுவதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், கோவை மாவட்டம் முழுவதும் கேரளா செல்லும் சாலைகளில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குனியமுத்தூர் புட்டு விக்கி சாலையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் நேற்றைய தினம் (மார்ச் 17) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தலா 50 கிலோவாக 40 மூட்டைகளில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 டன் ரேசன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார். ஆட்டோ ஓட்டி வந்த அய்யாதுரை என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, துக்கரை பாலத்துறையை சேர்ந்த சுதாகர் என்பவர் மூலம், கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள இரண்டு கூட்டுறவு நியாய விலைக் கடையில் ரேசன் அரிசியை, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் மூலம் மலிவான விலையில் வாங்கி அதனை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து, நியாய விலை கடைக்கு நேரில் சென்ற குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், விசாரணை மேற்கொண்டதில் கூட்டுறவு நியாய விலை கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்களான வடவள்ளியை சேர்ந்த மீனா மற்றும் சிங்காநல்லூரை சேர்ந்த லதா ஆகிய இரண்டு பேரும் மலிவான விலைக்கு அரிசியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...