திருச்சி-கோவை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தாராபுரத்தில் இருந்து பல்லடம் வழியாக கோவைக்கு அதிவேகமாக தனியார் டூரிஸ்ட் வேனை இயக்கிய ஓட்டுநருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்: பல்லடத்தில் வேகமாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் தனியார் டூரிஸ்ட் வேன் ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரத்தில் இருந்து பல்லடம் வழியாக கோவையை நோக்கி தனியார் டூரிஸ்ட் வேன் அதிவேகத்தில் இயக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வேனை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதிகவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ராஜ்குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும், அதிவேகமாக வாகனத்தை இயக்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
அதிவேகமாக இனி வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர் ராஜ்குமாரை எச்சரித்தும் அனுப்பினர்.