திமுகவை கண்டித்து உடுமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து உடுமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு பதிந்துள்ள பொய் வழக்கை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் பேசிய திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் தாங்கள் கொண்டு வந்ததாக கூறி பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து வருகிறார்கள். மேலும், மக்களை தொடர்ந்து ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர்.



அதிமுகவினர் மீதுதினந்தோறும் பொய்வழக்குகளை போட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு போட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...