கோவையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோவை: கோவையில் சமீபத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டனர்.
இந்த நிலையில் போலீசார் சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவோரை கைது செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வினோதினி என்ற தமன்னா போலீசாரால்கைதாகி சிறையில் அடைப்பக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவை ராமநாதபுரம் போலீசார் சமூக வலைதளத்தை நோட்டம்விட்ட பொழுது, தருண் என்கிற இன்ஃபெண்ட் ராஜ், தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. rowdy-baby-007, dharun.manisha, kuchi-vadapuu-daa-thamnii போன்ற சமூக வலைதள பக்கங்களில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்திருப்பதையும் உறுதிசெய்தனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசார் சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவோரை கைது செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வினோதினி என்ற தமன்னா போலீசாரால்கைதாகி சிறையில் அடைப்பக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவை ராமநாதபுரம் போலீசார் சமூக வலைதளத்தை நோட்டம்விட்ட பொழுது, தருண் என்கிற இன்ஃபெண்ட் ராஜ், தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. rowdy-baby-007, dharun.manisha, kuchi-vadapuu-daa-thamnii போன்ற சமூக வலைதள பக்கங்களில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்திருப்பதையும் உறுதிசெய்தனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.