கோவையில் சுரங்கப்பாதை தடுப்புத் தூண் விழுந்து விபத்து - அரசுப் பேருந்து சேதம்

கோவையில் லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் இருந்த சுரங்கப்பாதை தடுப்பு தூண் திடீரென விழுந்ததில் அரசு பேருந்து சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியிலே லங்கா கார்னர் ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்க பாதையில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால் முன் கூட்டியே வாகனங்கள் நிறுத்த இரும்பு தடுப்பு, சுரங்க பாதைக்கு முன்னதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல அவ்வழியாக சென்ற அரசு பேருந்து தடுப்பை கடந்துச் சென்ற போது, பேருந்தின் மேல் பகுதியில் வைத்திருந்த ஸ்டெப்னி டயர், இரும்பு தடுப்பு மீது மோதியது.



இதனால்இரும்பு தடுப்பு உடைந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால் அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை.



இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார்தடுப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மாற்று பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இரும்பு தடுப்பு விழுந்த போது இரு சக்கர வாகனங்கள், கார்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...