கோடைக் காலம் துவங்கியுள்ள நிலையில் கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைகழகம் பின்புறம் உள்ள மலையை ஒட்டிய பகுதியில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: பாராதியார் பல்கலைக்கழகம் பின்புறமுள்ள வனப்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம், மலையை ஒட்டிய பகுதியில் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான காலியிடம் உள்ளது.

அங்கு கோரை புற்கள், மரங்கள் மற்றும் புதர்கள் உள்ள பகுதியில் திடிரென மாலை நேரத்தில் தீ பிடித்து எரியத்துவங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
2 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் மாலை நேரத்தில் லேசான மழையும் பெய்ததால் காட்டு தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.
கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம், மலையை ஒட்டிய பகுதியில் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான காலியிடம் உள்ளது.
அங்கு கோரை புற்கள், மரங்கள் மற்றும் புதர்கள் உள்ள பகுதியில் திடிரென மாலை நேரத்தில் தீ பிடித்து எரியத்துவங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
2 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் மாலை நேரத்தில் லேசான மழையும் பெய்ததால் காட்டு தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.