'கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை' சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் விளக்கம்.


சின்னமேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்குமார், 35, தொடர்ந்து காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதனை அடுத்து கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹனீபா, 78 என்ற முதியவரும் தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கோவையிலுள்ள பல தனியார் மருத்துவமனைகளில் 30 க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு, தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார துறையினர் உயிரிழப்பு இல்லை என்றே கூறி வருகின்றனர்.

இது குறித்து, கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஓ. பானுமதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறும் பொது "கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை. அரசு மருத்துவமனையில் பல்வேறு காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழப்போர் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் 68 பேர்  சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதில் நேற்று 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதார துறையில் போதுமான மருந்துகள் கைவசம் உள்ளன. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...