கோவையில் குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவி - விரக்தியில் குடிமகன் தற்கொலை!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சசிதரன் என்பவர் மதுபோதைக்கு அடிமையானவர். மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அவர் சாணிப்படவுரைக் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி சார்ந்தவர் சசிதரன் (வயது60). மது போதைக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

இந்த நிலையிலே இவர் சம்பவத்தன்று தனது மனைவியிடம் மது பருகுவதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிதரன் வீட்டில் இருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்துள்ளார்.

இதனை அறிந்த அவரது குடும்பத்தார், உடனடியாக சசீதரனை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சசிதரன் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குடி குடியை கெடுக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மது குடிக்க பணம் கிடைக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...