பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த 6 கோடி ரூபாய் தொகையை மீட்டுத் தரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

அம்மனுவில், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் டெல்லியை தலைமையிடமாக கொண்டு கடந்த 35 வருடங்களாக செயல்பட்டு வந்த பியர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிட்டு (பிஏசிஎல்) என்ற நிறுனத்தில் மாதத்தவணையாகவும், நிரந்தர வைப்பு தொகையாகவும் எங்கள் பகுதி முகவர்கள் மூலம் முதலீடு செய்தோம்.

நாங்கள் கூலி வேலை செய்து சிறுகச்சிறுக சேமித்து பிற்கால குடும்ப தேவைக்காகவும், ஜீவாதாரத்திற்காகவும் இதை முழுக்க முழுக்க நம்பியே முதலீடு செய்தோம்.

நாங்கள் செய்த முதலீட்டுத் தொகைக்கு முதிர்வு தேதியும் முடிந்துவிட்டது. இருப்பினும் எங்களது தொகைகள் வழங்கப்படவில்லை. லட்சக் கணக்கான மக்கள் முதலீடு செய்த சுமார் 6 கோடி ரூபாய் என்னவானது என்றே தெரியவில்லை.

எனவே, மத்திய, மாநில அரசுகளும், கோவை மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது தொகை திரும்பக்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...