சூலூரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் - 4 பேர் கைது

சூலூர் ரயில்வே கேட் அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த மதன்ராஜ் (26), மாதரம்(31),சிவசாமி (48) மற்றும் ராஜா (52) ஆகியோரை போலீசார் கைது செய்து 735 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: சூலூர் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சூலூர் பகுதியில் குட்கா பொருட்களை சிலர் பதுக்கி விற்பனைக்கு செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சூலூர் போலீசார், சூலூர் ரயில்வே ஃபீடர் சாலை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூரைச் சேர்ந்த மதன்ராஜ் (26), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாதரம்(31), அரசூர் பகுதியை சேர்ந்த சிவசாமி (48) மற்றும் சூலூர் பகுதியை ராஜா (52) ஆகிய 4பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 735 கிலோ குட்கா மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படுமென போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...