உடுமலை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு - நகராட்சி அதிகாரிகள் அதிரடி!

உடுமலை அடுத்த திருப்பூர் சாலை அருகே அர்பன் பாங்க் காலனி மனைப்பிரிவில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான 10.50 சென்ட் நிலத்தை உரிமையாளர், நகராட்சியிடம் ஒப்படைக்காமல், வேறு நபருக்கு விற்பனை செய்ய திட்டமிட்ட நிலையில் அதிகாரிகள் அதனை அதிரடியாக மீட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

உடுமலை நகராட்சி எல்லைக்குட்பட்ட திருப்பூர் சாலை அருகேயுள்ள அர்பன் பாங்க் காலனி மனைப்பிரிவில் மொத்த பரப்பளவில் 10 சதவீதம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 10.50 சென்ட் நிலமானது நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பூங்கா அமைப்பதற்காக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மனைப்பிரிவு உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதனை விற்பனை செய்ய முயற்சி செய்யப்பட்டதை தொடர்ந்து, நகராட்சியால் பூங்கா இடத்தினை கையகப்படுத்தி பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் இந்த இடத்தினை கிரயம் பெறாமலும், ஏமாறாமலும் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.



மீட்கப்பட்ட இடத்தின் மொத்த பரப்பளவு 10.50 சென்ட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி ஆகும்.

மேலும், நகராட்சியால் மனைப்பிரிவில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடுகள் ஒப்படைக்காமல் உள்ளவற்றை. கண்டறிந்து நகராட்சி சுவாதீனப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் மு.மத்தின் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...