தாராபுரத்தில் தனியார் ஆம்புலன்ஸின் தரம் குறித்து ஆர்டிஓ அதிகாரிகள் திடீர் சோதனை!

தாராபுரம் வட்டாரத்தில் இயங்கி வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த சோதனையில் உரிமம் காலாவதியான 2 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து திடீர் சோதனை நடைபெற்றது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து சோதனை மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.



இந்த உத்தரவின் பேரில், தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் 10க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில் திடீர் சோதனை நடைபெற்றது.



இந்த சோதனையில் உரிமம் காலாவதியான 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.



மேலும், இதுபோன்று உரிய ஆவணம் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், இரவு நேரங்களில் முகப்பு விளக்கு பயன்படுத்தாமல், இயக்கிய வாகனங்களும் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...