உடுமலையில் சாலைகளில் மக்காளச் சோளத்தை காய வைக்கும் விவசாயிகள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை உலர வைக்க போதுமான உலர் களங்கள் இல்லாததால், சாலைகளில் உலர வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், போதுமான உலர்களங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போதுமான உலர் களங்கள் இல்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த மக்காசோளத்தை சாலைகளில் காய வைத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம்உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.



நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு நீண்ட, மத்திய, குறுகியகால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை காயவைப்பதற்கு உலர் களங்கள் இல்லை என கூறப்படுகிறது.



இதனால், பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ள பொள்ளாச்சி, திண்டுக்கல் வரை செல்லும் நான்கு வழி சாலையில், உலர்த்தி வருகின்றனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு உள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது அறுவடைக்கு தயாராகி விட்டது. அதை அறுவடை செய்து காயவைப்பதற்கு உலர்கள வசதி இல்லை. இதனால் உடுமலை அருகே அமைக்கப்பட்டு வருகின்ற நான்கு வழிச்சாலையில் மக்காச்சோளத்தை காய வைத்து வருகின்றோம்.

இதில் போக்குவரத்து தொடங்கப்படாதது எங்களுக்கு சாதகமாக உள்ளது. இல்லையென்றால் தார்ப்பாய்களை வாடகைக்கு எடுத்து வயல்வெளியில் காய வைக்க வேண்டும். இதற்காக சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி வரும்.

ஏற்கனவே இடுபொருட்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு, ஆள்கூலி உயர்ந்துள்ள நிலையில் அறுவடைக்கு பின்னர் செலவுகளால் வருமானத்தில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை காய வைப்பதற்கு உலர்கள வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.

மேலும் தற்பொழுது குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை விலை நிர்ணயம் செய்யப்படுவது போதுமானதாக இல்லை ஆகையால் ஆதார விலையாக3000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 50,000 செலவு செய்து இருக்கும் நிலையில் 10 ஆயிரம் லாபம் கூட கிடைப்பது இல்லை.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...