புறநானூற்றுப் பாடல்களை பாடி சாதனை - 4 வயது சிறுவனுக்கு குவியும் பாராட்டு!

உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் விதுஷன், புறநானூற்றில், வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புறநானூற்று பாடலை ஒப்புவித்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு திறமைகள் உள்ளது. அவற்றை வெளிக் கொண்டு வரும் போது தான், அவை சாதனைகளாக வெளிப்படுகிறது. மேலும் சாதனை புரிவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை உடுமலையை சேர்ந்த சிறுவன் ஒருவர் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

உடுமலை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர்கள் ஜான்பால் மற்றும் கௌதமி தம்பதி. ஆசிரியர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு விதுஷன் என்ற 4 வயது மகன் உள்ளார். இவர், பள்ளிக்கு கூட செல்லாத நிலையில், மழலை பருவம் மாறாத மொழியில், புறநானூற்று பாடலை பாடி அசத்தி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சிறுவன் விதுஷன், புறநானூற்றில் வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...