சாதாரண மனிதனும் தொழில் நுடபத்தை பயன்படுத்த வேண்டும்..! - அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் யூமாஜின் என்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் முதல்வர் அறிவித்தபடி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.



கோவை: சூலூர் அருகே அரசூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.



கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெற உள்ள "யூமாஜின் கருத்தரங்கம் பற்றி விளக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.



நிகழ்வில் தொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சந்தேகங்களை அமைச்சரிடம் கலந்துரையாடி கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:



சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் "யூமாஜின் என்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தபடி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும்.

சாதாரண மனிதர்களும் தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

கடந்த 2 வருடங்களில் 20 சதவீதம் ஐடி துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட நகரங்களிலும் ஐடி துறைக்கான கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். மற்ற நாடுகளில் ஐடி நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தது போல தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...