மடத்துக்குளம் அருகே கரும்பு காட்டில் தீ விபத்து - குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ பரவியதால் பரபரப்பு!

மடத்துக்குளம் அடுத்த ஜோதம்பட்டி அருகே சாலையோர குப்பைகளில் வைக்கப்பட்ட தீ, ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் கரும்பு காட்டுக்கு பரவிய நிலையில், அங்கிருந்த விவசாயிகள் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ கரும்பு காட்டுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆஸ்பத்திரி மேடு பகுதியில் ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பயிரிடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.



இதனிடையே பயிரிடப்பட்ட கரும்புகள் அடுத்த மாதம் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சூழலில், காய்ந்த சருகுகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று என்று தீ பரவியுள்ளது.



இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஒன்றுகூடி, அடுத்தடுத்த கரும்பு காடுகளுக்கு தீ பரவாதவாறு தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர்.

இதனை அறிந்த வேளாண்துறை, வருவாய்த்துறை மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.



இதனிடையே ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், 100 அடி தூரத்திற்க்கு சாலை ஓரத்தில், குப்பைகள் கொட்டப்பட்டு, பாதுகாப்பின்றி தீ வைத்து எரிக்கப்படுவதால், அதிலிருந்து கரும்பு காட்டிற்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது.



இதனையறிந்த விவசாயிகள், கணியூர் காவல் நிலையத்தில், குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சேதம் அடைந்த கரும்பு பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இது போன்ற விபத்துக்கள் இனிமேலும் நடக்காமல், தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...