தாராபுரத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு - மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால், குழந்தைகள், முதியவர் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காலை, மாலை, மதியம், இரவு என பல்வேறு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின்சாரம் வந்து சென்றால் மின்விசிறி உட்பட வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் பழுதாகிவிடுகின்றன.

தற்போது 12ஆம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் தொடரும் இந்த மின்வெட்டை சரிசெய்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என தாராபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...